2025 நவம்பர் 05, புதன்கிழமை

தேனகம் மலருக்கு ஆக்கங்கள் கோரப்படுகின்றன

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் முத்தமிழ் விழாவில் வெளியிடப்படவுள்ள தேனகம் மலருக்கான ஆக்கங்கள் பொதுமக்களிடமிருந்து கோரப்படுகின்றன.

ஆக்கங்களை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பிவைக்குமாறு கலாசாரப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை வெளிக்காட்டுவதாக அமைதல் வேண்டும். மட்டக்களப்பின் பாரம்பரிய கூத்துக் கலை பற்றி வெளிவராத விடயங்கள் அமைவது சிறப்பாகும். இவற்றைத் தவிர கதை மற்றும் கவிதை என்பனவும் ஆக்கங்களுக்கு அவசியமாகவுள்ளன.

கலாசார உத்தியோகஸ்தர், பிரதேச செயலகம், மண்முனை வடக்கு, மட்டக்களப்பு என்று முகவரிக்கு ஆக்கங்களை அனுப்பிவைக்கமுடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X