Kogilavani / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்
யாழ்ப்பாண மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் 'சமயங்களின் ஊடாக கலாசார விழுமியங்களை கட்டியெழுப்புதல்' என்னும் செயற்பாட்டை மையப்படுத்திய வகையிலான நாடக நிகழ்வு யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் சனிக்கிழமை (26) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ், சின்மய மிஷனைச் சேர்ந்த ஜக்கிராத் சைதன்ய சுவாமிகள், அருட்தந்தை வின்சன்ட் அடிகளார் மௌலபி சுபியான் ஆகிய மதத்தலைவர்கள் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினர்.
இந்நிகழ்வில் யாழப்பாண கல்வி வலயத்தைச் சேர்ந்த கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ்.திருக்குடும்ப கன்னியர் மடப்பாடசாலை, அச்சுவேலி தென் திரேசா கல்லூரி, கோண்டாவில் இந்துக்கல்லூரி, செங்குந்தா இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலை மாணவர்களின் நாடக ஆற்றுகைகள் மேடையேற்றப்பட்டன.


18 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
2 hours ago