2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

இளைஞனின் உயிரைப் பறித்த மதில்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்டூர்ப்  பிரதேசத்தில் வீட்டு சுற்று மதில் இடிந்து வீழ்ந்ததில்  பேரின்பராஜா பேணுஜன் என்பவர் இன்று அதிகாலை (16) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் தனது இரவுச்சாப்பட்டை உண்டு விட்டு வெளியில் சென்றதாகவும், எனினும் நேரம் சென்றும் வீடு திரும்பாத நிலையில் அவரைத் தேடிய போது,    சுற்று மதில் உடைந்த நிலையில் கற்களுக்குள் சிக்குண்டு இறந்த நிலையில் காணப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இம்மரணம் குறித்து தடயவியல் பொலிஸார் மற்றும் வெல்லாவெளிப் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

           

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .