2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

காதி நீதிவான் நியமனம்

Freelancer   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூர் வீதியைச் சேர்ந்த  மௌலவி ஏ.சி அப்துல் லத்திப் (நூரி),  நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் காதி நீதவானாக   நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்,  திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிவான் சூசைதாசன் முன்னிலையில், காதி நீதிவானாக  சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

மௌலவி ஏ.சி அப்துல் லத்திப் (நூரி),  திருகோணமலை ஜம்இய்யத்துல் உலமா சபையின் முன்னால் செயலாளரும், திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் ஆரம்பகால தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

இவர், ஹனிபா மற்றும் உம்மு ஸலீமா ஆகியோரின் புதல்வர் என்பதோடு, ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

                                                                                                                                        எப். முபாரக்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .