2025 ஜூன் 25, புதன்கிழமை

பேச்சுவார்த்தையில் முஸ்லிங்கள் கலந்துகொள்ள வேண்டும்

Freelancer   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும்  சுதந்திரதினத்துக்கு முன்னர், நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர  தீர்வைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். 

இதைத்தொடர்ந்து, ஜனாதிபதியால் தமிழ்த் தரப்பை சந்தித்துப் பேசுவதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருகின்றது . ஆனால், முஸ்லிம் மக்களுக்கான தீர்வு தொடர்பில் பேசுவதற்கு,  முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை,  எங்கள் மத்தியில் பலதரப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இதைக்  கருத்தில் கொண்டு, அம்பாறை மாவட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனம், சம்மேளன தலைவர்டொக்டர் எஸ்.எம்.ஏ அசீஸ் தலைமையில் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் கூடி தீர்மானங்களை மேற்கொண்டது.

அதில்,  முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தையின்போது தனித்தரப்பாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவேண்டும் என்பதோடு முஸ்லிம் சமூகத்துக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை மேலும் ஆய்வு செய்திட  நிபுணத்துவ ஆலோசனைக்குழுவை அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .