A.P.Mathan / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தா நியமிக்கப்பட்ட பிறகு பெரும் போராட்டங்கள் வெடித்தன. நித்தியின் சீடர்கள் "அராஜகவாதிகள்" போல் காட்சியளித்தார்கள். மதுரை ஆதீனத்திற்குள் இருந்த அவர்களை வெளியேற்றச் சென்ற போராட்டக்காரர்கள் மீது செருப்புகளைக் கூட தூக்கி வீசினார்கள். பொலிஸ் மீதும் அதுமாதிரியொரு தாக்குதல் நடந்தது. ஆனாலும் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாததால் நித்தியானந்தாவின் சீடர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அமைதி காத்தனர். குறிப்பாக மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் (மதுரை ஆதீன மடம் இருக்கும் பகுதி) நித்தியானந்தா மீதும் அவரது சீடர்கள் மீதும் பல புகார்கள் குவிந்தாலும், நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். ஆனால் அதே நேரத்தில் நித்யானந்தாவிற்கு தலைவலி வந்தது மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் வடிவில்தான். மதுரை ஆதீனத்திற்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த கோயிலுக்கு மதுரை ஆதீனம் சென்றால் அம்மனின் கருவறைக்கே சென்று தரிசிக்கும் உரிமை உண்டு. இன்னும் சொல்லப்போனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தில் கூட ஒரு காலத்தில் மதுரை ஆதீனத்திற்கு முழு பங்கு உண்டு. இந்நிலையில் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தன் மூத்த மடாதிபதிக்கு கிடைக்கும் மரியாதை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இதன் பிறகு தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. நித்தியானந்தா - மீனாட்சி அம்மன் கோயிலிலும் உரிமை கொண்டாடுவதை தமிழக அரசின் சார்பில் கோயில்களை பராமரிக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதேவேளையில், மதுரை மாவட்டத்திற்கு வந்த ஆட்சி தலைவர் (கலெக்டர்) தன் சீடர் என்று ஒரு வில்லங்கப் பேட்டியை நித்யானந்தா கொடுத்தார். அது மட்டுமின்றி, "எனக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு உண்டு" என்ற ரீதியிலும் பத்திரிகைகளில் செய்திகளை கசியவிட்டார். அது முதல்வருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. "மடாதிபதிகளுக்குள் பிரச்சினை. அதில் அரசு தலையிட வேண்டாம்" என்ற எண்ணத்தில் இருந்த முதல்வருக்கு நித்தியானந்தாவின் பேட்டிகள், நடவடிக்கைகள் எல்லாம் கோபத்தை ஏற்படுத்தியது. ஆகவே நித்யானந்தாவிற்கும் மற்ற மடாதிபதிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான போராட்டம், நித்யானந்தாவிற்கும் தமிழக அரசுக்குமான போராட்டமாக உருவெடுத்தது. "மதுரை ஆதீனத்தை அரசே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று போராட்டக்காரர்கள் மனு கொடுத்த போது அமைதியாக இருந்த, இந்து சமய அறநிலையத்துறை நித்யானந்தாவிற்கு கோப்புகளை பரிசீலிக்கத் தொடங்கியது.5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago