Super User / 2011 மார்ச் 22 , பி.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)(7).jpg)
"....இப்படியாக அடக்குமுறையாளரின் வன்முறை, அடக்கப்பட்டவர்களின் அஹிம்சையை ஒடுக்கியது. சிங்கள பெருமிதவாதத்தின் ஆயுத வலு தமிழர்களின் வன்முறையில்லாத போராட்டத்தை நசுக்கியது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, தமிழ் தேசிய போராட்டத்துக்கு மிகவும் அவசியமான அரசியல் அநுபவத்தின் தொடக்கமாக அமைந்தது.
இந்த அநுபவம் தமிழர்களுக்கு ஒரு பாடத்தையும் கற்றுக்கொடுத்தது. தமது அகிம்சை வழியான போராட்டத்தின் ஆன்மீக பலம், வன்முறை அடக்குமுறையாளரின் இராணுவ பலத்தின் முன் தாக்குபிடிக்காது என அவர்கள் அறிந்து கொண்டனர். இந்த அடக்குமுறையாளர்கள் மனிதத்தின் தார்மிக நியமங்கள், நாகரிகப்பண்பு என்பவற்றை கடந்தவர்களாக காணப்பட்டனர்.
தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இராணுவ பயங்கரவாதத்தின் மூலம்தான் பதிலளிக்க வேண்டும் என்ற கருத்தை இந்த நிகழ்வு, அடக்கு முறையாளரிடம் உண்டாக்கியது.
தமிழ் அரசியல் எதிர்ப்பின் அஹிம்சை வழி என்னும் அத்திவாரம், துப்பாக்கிக் குழலின் முன் பலவீனமானது, வலுவுற்றது என அவர்களை எண்ண வைத்தது." - அன்ரன் பாலசிங்கம் எழுதிய 'விடுதலை புலிகளும் தமிழீழ சுதந்திர போராட்டமும்' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
இழந்த உரிமைகளை பெறுவதற்கான இலங்கை தமிழ் அரசியல் போராட்ட வரலாற்றில் பெப்ரவரி 20, 1961 ஒரு முக்கிய நாளாகும்.
இந்த நாளில்தான் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தால் தலைமை தாங்கப்பட்ட ஆங்கிலத்தில் 'பெடரல்' கட்சி என அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி ஐம்பது ஆண்டுகளுக்கு முன், உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமா பண்டாரநாயக்காவால் தலைமை தாங்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக அஹிம்சைவழி நேரடி நடவடிக்கை இயக்கத்தை ஆரம்பித்தது.
தமிழ் போராளிகள் மேற்கொண்ட கொடூரமான ஆயுத போராட்டத்தை ஆண்டாண்டு காலமாக கண்டு வந்தமையால் பலரின் மனதில் தமிழ் அரசியல் இயல்பு அடிப்படையில் வன்முறையானது என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது. இந்த வன்முறை, தமிழர் கோரிக்கைகளின் நியாயத்தை தட்டிக்கழிக்க சுயநலமிகளுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. இந்த 'பிரச்சினை'யை சட்டம், ஒழுங்கு தொடர்பான விடயமாக சித்திரிக்கவும் முடிந்தது.

சுதந்திரத்துக்கு பின்னரான மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழ் அரசியல் போராட்டம் மாகாத்மா காந்தியின் அஹிம்சை தத்துவத்தை கடைப்பிடித்த வன்முறையில்லாத வழியில் அமைந்திருந்தது என்ற உண்மை மறக்கப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்டு, வருகிறது.
வன்முறையில்லாத தமிழ் போராட்டம் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற தவறியதே விரக்தியுற்ற தமிழ் இளைஞர்களை துப்பாக்கி தூக்க வைத்தது என பலர் கருத்து தெரிவித்தனர்.
இது எவ்வாறு இருந்தபோதிலும், 20 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காற்பகுதி, இலங்கைத் தமிழர்களால் நடத்தப்பட்ட வன்முறை சாராத எதிர்ப்பு நடவடிக்கைகள் நிறைந்து காணப்பட்டது என்பதை மறுக்கமுடியாது. இந்த காலத்தில் ஹர்த்தால்கள், சத்தியாக்கிரகங்கள், கறுப்புக் கொடி காட்டுதல், ஊர்வலங்கள் , பேரணிகள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், துக்கதினம் அனுஷ்டிப்புகள் ஒத்துழையாமை இயக்கம், மக்கள் எதிர்ப்பியக்கம், பகிஷ்கரிப்பு என்பன தமிழ் அரசியலின் வெளிப்பாடாக இருந்தன.
இந்த வன்முறை சாரா அரசியல் எதிர்ப்பின் முக்கிய வெளிப்பாடாக பெப்ரவரி 20, 1961 இல் தொடக்கி நடத்தப்பட்ட மகா சத்தியாக்கிரக இயக்கம் இருந்தது.
இலங்கை தமிழர்கள் பெருமைப்படக்கூடிய ஒரு சாதனையாக இந்த சத்தியாக்கிரகம் அமைந்தது. இராணுவ ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் வரையில் ஒரு சிறிய, ஆயுதம் தாங்காத மக்கள், அர்ப்பணிப்பு மற்றும் ஐக்கியம் மூலம், கொழும்பு அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இரண்டு மாதகாலமாக முடக்கி வைத்திருந்தனர்.
அறிகுறி
ஆயுத படைகள் அழைக்கப்பட்டமை, வடக்கு கிழக்கு மாகாணங்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதன் அறிகுறியாக அமைந்தது. இப்பகுதிகளில் அதிகரித்த தீவிரவாதம், அதிகரித்த இராணுவமயப்படுத்தலால் எதிர்கொள்ளப்பட்டது.
இப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அளவுக்கு மீறிய இராணுவ பிரசன்னம் காணப்படுகிறது. இந்த மாகாணங்களில் பிரதிநிதித்துவ அரசியல் வீழ்ச்சி கண்டு, சிதைந்து வருகிறது.
அடிப்படையில் வன்முறையற்ற இயல்பினதாக இருந்தபோதும் 1961 சத்தியாக்கிரகம், தமிழ் அரசியலின் எதிர்கால செல்நெறியின் அறிகுறிகளையும் வெளிப்படுத்தியது. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட சில இளைஞர்கள் வெளிப்படுத்திய அவசரம், வரக்கூடிய தீவிரவாதத்தின் எழுச்சியை அடையாளம் காட்டியது.
சத்தியாக்கிரகத்தின்போது, சமாந்தரமாக நடத்தப்பட்ட தபால்சேவை போன்ற சட்டமறுப்பு நடவடிக்கைகளும், எதிர்காலத்தில் வளரப்போகும் பிரிவினையையை சுட்டுவதாக இருந்தன.
திருமதி பண்டாரநாயக்கவை அதிகாரத்துக்கு கொண்டுவந்த 1960 யூலை தேர்தல்களில் சமஷ்டி கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் கூட்டாளியாக இருந்தது என்பது கவலைக்குரிய முக்கிய விடயமாக இருந்தது.
இவ்வாறு இருந்தபோதும், நிலைமைகள் மோசமடைந்தன. ஒரு வருட காலத்தினுள் பிரதான சிங்கள கட்சிகளும், தமிழ் கட்சிகளும் ஒன்றோடு ஒன்று பிரச்சினைப்பட்டுக் கொண்டிருந்தன. இவ்வாறு அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கபடாதவாறு தடைப்பட்டபோது அது அரசியல் மோதலாகி 1961 சத்தியாக்கிரகத்தில் முடிந்தது.
முக்கியத்துவம்
இந்த விடயங்களை நன்கு விளங்கிக்கொள்வதற்கு மார்ச் 1960 இலும் யூலை1960 இலும் நடந்த பொது தேர்தல்கள்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்த தேர்தல்களில் டட்லி சேனநாயக்க அரசாங்கத்தை வீழ்த்தியும் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தை கொண்டு வந்தும் சமஷ்டி கட்சி முக்கிய பங்காற்றியது.
ஐ.தே.க.விக்கு எதிராக சமஷ்டிக்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு வைப்பதற்கு காரணமாக அமைந்தவை பற்றியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – சமஷ்டிக் கட்சி கூட்டு உடைந்தமை பற்றியும் விபரமாக அறிந்திருப்பது முக்கியமானதாகும்.
1961 சத்தியாக்கிரகம் நடைபெற்ற பின்னணியை நன்கு விளங்கிக் கொள்வதற்கு, அதற்கு முந்தைய கால நிகழ்வுகளை ஆராய்வது அவசியமானதாகும்.
மார்ச் 1960 இற்கும் யூலை 1960 இற்கும் இடையில் மிகவும் சிக்கலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இவற்றில் சமஷ்டிக் கட்சி வெளியில் தெரியாத முக்கிய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது. 1961 சத்தியாக் கிரகத்தைப் பற்றி நன்கு விளங்கிக் கொள்ள இந்த விடயங்களை நன்கு ஆராயவேண்டும்.
சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்தபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கமும் எதிர்க்கட்சியான சமஷ்டிக கட்சியும் காட்டிய தீவிரமும், உறுதிப்பாடும் முழுமையாக விளங்கிக் கொள்ளப்படுவதற்கு, மார்ச்- யூலை 1960 காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.
செப்டெம்பர் 1959 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கொலையுண்ட பின், வித்தியாசமான போக்குக் கொண்ட டபிள்யூ. தஹநாயக்கா பிரதமரானார். ஆனால் இவர் பிரதமராக இருந்தது கொஞ்சக் காலத்திற்குதான். மார்ச் 1960 இல் புதிதாக தேர்தல் நடத்தப்பட்டது.
101 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்கள் 157 ஆக அதிகரித்தது. இதில் 6 பேர் நியமன உறுப்பினர்களாக இருந்தனர். 151 உறுப்பினர்கள் 145 தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். கொழும்பு தெற்கு, அக்குரணை, மட்டக்களப்பு, மூதூர் ஆகிய தொகுதிகள் இரட்டை அங்கத்தவர்கள் தொகுதிகளாக இருந்தன. கொழும்பு மத்தியிலிருந்து மூன்று அங்கத்தவர்கள் தெரிவாகினர்.
பிரசாரம்
1953 இல் தானாக அரசியலை விட்டு நீங்கிய டட்லி சேனநாயக்க 1957 இல் மீண்டும் அரசியலுக்கு வந்திருந்தார். அவர் 1960 தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமை தாங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சி.பி.டி சில்வாவினால் தலைமை தாங்கப்பட்டது.
தேர்தல் பிரசாரத்தில் கொலையுண்ட பண்டாரநாயக்கவின் மனைவி சிறிமா முக்கிய பங்கு எடு;க்கவில்லை.
மக்கள் ஒற்றுமை முன்னணியின் தலைவர் பிலிப் குணவர்த்தன, லங்கா சம சமாஜிஸ்ட கட்சியின் தலைவர் டாக்டர். என்.எம். பெரேரா, காபந்து பிரதமர் தஹநாயக்க ஆகியோர் பிரதமராக ஆசைபட்டவர்களாக இருந்தனர்.
தேர்தல் முடிவு தொங்கு நாடாளுமன்றத்துக்கு வழிவகுத்தது. லங்கா சமசமாஜிஸ்ட் கட்சி, மக்கள் ஒற்றுமை முன்னணி ( ஆநுP) என்பவை தலா 10 இடங்களை எடுத்திருந்தன. மூன்றாவது பெரிய கட்சியான சமஷ்டிக் கட்சி 15 இடங்களை எடுத்திருந்தது. புதிய நாடாளுமன்றத்தில் சமஷ்டி கட்சி தீர்மானிக்கும் கட்சியாக இருந்தது.
ஐ.தே.க. சார்பானவர் என கருதப்பட்ட கவர்னர் ஜெனரல் சேர். ஒலிவர் குணதிலக தனியொரு கட்சியாக அதிகூடிய இடத்தை எடுத்த ஐ.தே.க.வை அரசாங்கத்தை அமைக்கும்படி அழைத்தார். ஆனால் டட்லி சேனாநாயக்காவினால் அரசாங்கத்தை அமைக்க கூடிய பெரும்பான்மையை பெற முடியுமா என்பது சந்தேகத்துக்கு உரியதாகவே இருந்தது.
நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில சுயேட்சை அங்கத்தவர்கள், கட்சி மாறிவரக் கூடியவர்கள் என்று பார்த்தாலும் டட்லி சேனாநாயக்கவினால் மொத்தமாக 157 அங்கத்தவர்களில் 60 அல்லது 61 பேரை மட்டுமே சேர்க்கக் கூடியதாக இருந்தது. சமஷ்டி கட்சியின் 15 அங்கத்தவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டால், இன்னும் சில சுயேட்சை அங்கத்தவர்களையும், சிறுகட்சிகளின் அங்கத்தவர்களையும் தன்பக்கம் இழுக்க முடியும் என டட்லி சேனநாயக்கா நம்பிக்கை கொண்டிருந்தார்.
செல்வநாயகம்
சேனநாயக்க ஒரு உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு செல்வநாயகத்தின் ஆதரவு அத்தியாவசியமான இருந்தது. இவ்வாறே மாற்று அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சமஷ்டிக் கட்சியின் ஆதரவு முக்கியமானதாக இருந்தது.
எனவே வெற்றியாளரான சமஷ்டிக் கட்சி தலைவர் பலாலியிலிருந்து இரத்மலானைக்கு விமானத்தில் சென்றபோது, அவர் அரசியல் ரீதியில் மிகவும் வேண்டப்பட்டவராக காணப்பட்டார்.
முன்னாள் பிரதமர் சேர்.ஜோன் கொத்தலாவல முன்னாள் சட்டசபை உறுப்பினர் சேர். அருணாசலம் மகாதேவா, இளைப்பாறிய பிரதம நீதியரசர். சேர்.எட்வேட் ஜயதிலக, முன்னாள் நீதியமைச்சரும், செனட் தலைவருமான சேர். லலித் ராஜபக்ஷ ஆகிய முக்கியஸ்தர்கள், ஐ.தே.க.வின் சார்பில், செல்வநாயகத்தை தமது பக்கம் இழுக்க முயன்றனர். டட்லி சேனநாயக்கவுடன் கூட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்தனர்.
ஆனால், ஐக்கிய தேசிய கட்சியால், போட்டியிட முடியாத துரும்புச் சீட்டு ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வைத்திருந்தது.
இதுதான் பண்டா- செல்வா ஒப்பந்தமாகும். இது யூன் 1957 இல் கையொப்பமிட்டது.
இந்த ஒப்பந்தத்தில் வடக்குக்கு ஒரு பிராந்திய சபையும் கிழக்குக்கு இரண்டு பிராந்திய சபையும் அமைப்பதாக ஏற்கப்பட்டிருந்தது. இதில் இணைக்க கூடிய ஏற்பாடும் காணப்பட்டத
2 hours ago
5 hours ago
9 hours ago
siva Wednesday, 23 March 2011 11:32 AM
மிகவும் நல்ல கருத்து.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago