Super User / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் நாட்டில் வாழும் இலங்கை அகதிகளைப் பற்றிய விவரங்களை அறிய இலங்கையிலிருந்து நாடாளுமன்ற தூதுக் குழுவொன்று தமிழ் நாட்டுக்குச் செல்கிறது. தூதுக் குழுவிற்கு தலைமை தாங்க ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மறந்து ஓர் அமைச்சரைப் போல் முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப் படுத்தி செயற்படுகிறார்.
இந்த வகையில் இலங்கைக்கு வந்த இந்திய நாடாளுமன்ற துதுக்குழு இலங்கை தமிழர்களைப் பற்றி முக்கியமான பல தகவல்களை திரட்டிக் கொண்டதைப் போலவே இலங்கையில் அனைவருக்கும் சிறந்ததோர் அரசியல் பாடத்தையும் கற்பித்துவிட்டுச் சென்றது.
இந்தியாவும் பூரணமாக அரசியல் நாகரிகம் கொண்ட நாடு என நாம் இங்கே வாதிடப் போவதில்லை. ஆனால், இந்திய தூதக்குழுவின் இலங்கை விஜயம் இலங்கைக்கு பல பாடங்களை கற்பித்தது என்பது உண்மை.
இது போன்ற முன்னைய பயணங்கள் பயனளிக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி முதலில் தி.மு.க. தூதுக் குழுவிலிருந்து விலகிக் கொண்டது. ஆனால் அது நியாயமான காரணமாக ஏற்க முடியாது. ஏனெனில் இலங்கையின் உண்மையான நிலைமையை அறிய வேண்டும் என்ற தேவை அக் கட்சியிடம் பாரதூரமாக இருந்திருந்தால் முன்னைய பயணங்கள் பயனில்லாமல் பொனதைப் போல் இந்தப் பயணமும் பயனில்லாமல் போகாதிருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து தாமும் தூதக் குழுவில் சேர்ந்து இலங்கையிலுள்ள நிலைமைகளை அம்பலப் படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .