Super User / 2012 மே 27 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்று விடுதலையானாலும் அவரது அரசியல் எதிர்காலம் இன்னமும் நிச்சயமற்றதாகவும் தெளிவற்றதாகவுமே இருக்கிறது. அதேவேளை, அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென ஏன் முடிவு செயதார் என்பதும் இன்னமும் தெளிவற்ற விடயமாகவே இருக்கிறது.
பொன்சேகாவின் விடுதலையைப் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் சில மாதங்களாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதன் விளைவாகவே அவர் விடுதலை செய்யப்பட்டார் என கூறப்பட்டது. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி அவர் விடுதலை செய்யப்பட்டார் என்றால் அவருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமைகளை வழங்க ஜனாதிபதி ஏன் இணங்கவில்லை?
ஆனால், ஜனாதிபதி அவ்வாறு அரசியல் உரிமையுடனான மன்னிப்பை பொன்சேகாவுக்கு வழங்கவில்லை என்றே தெரிகிறது. அவ்வாறாயின் இது அவர் தற்போது எதிர்நோக்கி இருக்கும் மிகப் பாரதூரமான பிரச்சினையாகும். 3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago