A.P.Mathan / 2012 ஜூன் 05 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் மூன்றாம் திகதி தடல்புடலாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவவி சோனியா காந்தி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். தி.மு.க. முன்னணித் தலைவர்களும் வாழ்த்துச் சொன்னார்கள். ஆனால் 2-ஜி அலைக்கற்றையில் சிக்கி பிணையில் வெளியே வந்து டெல்லியில் தங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா வாழ்த்துச் சொல்ல வரமுடியவில்லை. "நீதிமன்றத்தின் அனுமதியின்றி தமிழ்நாட்டுக்குப் போகக் கூடாது" என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி போட்ட உத்தரவின் விளைவால் அவரால் சென்னைக்கு வர முடியவில்லை. ஆனால் வழக்கமாக வருபவர் என்றாலும், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துச் சொன்னது சற்று வித்தியாசமாக இருந்தது.4 hours ago
5 hours ago
IBNUABOO Sunday, 10 June 2012 05:23 AM
உண்மையில் கலைஞர் முக.அவர்கள் சாதாரணமான மனிதர் அல்ல .அவர் ஆயுள் அதிகரித்தாலும் இந்த 89 இலும் போர்ர்குனம், செயல்திரன் தலைமைத்துவ கம்பீரம் இன்னும் உயிர் துடிப்புடன் திகழ்கிறதே. அவர் ஒருவர்தான் இந்த வயதான காலதில் வாலிபனாக வாழ்ந்து காட்டுபவர். இலக்கிய வாதிகளுக்கு பெருமை சேர்த்தவர். ஏன் தெரியுமா? இந்திய மாபெரும் அரசியல் வாதிகளில் இன்று கலை இலக்கிய வித்தகனாய் திகழ்பவர் கலைஞர் மட்டும்தான், அவரது நல்லவற்ரை போற்றுவோம். இப்பிறந்த நாளில் அவரை வாழ்த்துவோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago