Super User / 2012 ஜூலை 23 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோன்பும் வந்து விட்டது. கிழக்கில் தேர்தலும் அத்தோடு வந்து விட்டது. இனி என்ன நடக்கப் போகிறது? கிழக்கு மாகாண முஸ்லிம்கள் நோன்பை பெயரளவில் வைத்துக் கொண்டு தேர்தலின் பெயரால் சண்டையிட்டுக் கொள்வார்களா? அல்லது தேர்தலினால் பயன் பெறப் போகிறவர்களை முன்பே அறிந்து தேர்தலை பெயரளவில் வைத்துக் கொண்டு நொன்புக்கு முக்கியத்துவம் அளிப்பார்களா? எல்லாம் அரசியல்வாதிகளின் கைகளில் தான் இருக்கிறது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏனைய மூன்று பிரதான அணிகளாகும். அவற்றில் மு.கா. பக்கமாக சில தினங்களாக ஊடகங்களின் கவனம் திரும்பியிருந்தது. முஸ்லிம்கள் செறிவாக வாழும் கிழக்கில் தேர்தல்களின் போது முஸ்லிம் காங்கிரஸ் நிர்ணயகரமான சக்தியாக கருதப்படுவதே அதற்குக் காரணமாகும்.
ஒரே அரசாங்கத்தில் இருப்பதால் இவர்களிடையே கொள்கை பிரச்சினை இல்லை என சிலர் கூறலாம். இரு கட்சிகளிடையே ஏற்கனவே கொள்கையளவில் இணக்கப்பாடு இருந்திருந்தால் வேட்பாளர் எண்ணிக்கை ஏன் பிரச்சினையாக அமைய வேண்டும்? கோள்கைக்காக எந்தக் கட்சியாவது விட்டுக் கொடுத்திருக்கலாமே. meenavan Tuesday, 24 July 2012 10:13 AM
மகி ராசா கிழக்கு மாகாண சபை தேர்தலில் பங்காளி கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிலை சின்னத்தில் ஒரு குதிரையையும்,கூட்டாளி கட்சியான மு.கா.வின் மரசின்னத்தில் ஒரு குதிரையும் களத்தில் இறக்கியுள்ளதினால் அவர் பயப்படமாட்டார், இந்நிலையில் மு.கா.வினரும் கொள்கையை பெரிதாக மதித்து எதிர் கட்சியினருடன் இணைந்து ஆட்சி அமைப்பதை விட அரசுக்கு முட்டு கொடுத்து அமைச்சர் பதவிகளை பாதுகாப்பதிலேயே முன்னுரிமை வழங்குவர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .