A.P.Mathan / 2012 ஒக்டோபர் 03 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜெயக்குமார் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அ.தி.மு.க.) உள்ள மூத்த அமைச்சர்களை பீதியில் உறைய வைத்திருக்கிறது. இதுவரை அமைச்சர்களாக இருந்தவர்கள் திடீர் திடீரென்று கடந்த காலங்களில் மாற்றப்பட்டார்கள். ஆனால் இப்போதுதான் சபாநாயகர் ஒருவரே தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சபாநாயகர் தன் பிறந்த நாளை கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி கொண்டாடினார். அதற்கு வாழ்த்துப் பெற அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. அதற்கு பதில் தன் வீட்டிலேயே பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடினார். பொதுவாக அமைச்சர்களோ, முக்கிய கட்சி நிர்வாகிகளோ பிறந்த நாள், திருமண நாள் போன்ற நேரங்களில் தங்கள் தலைவரான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துப் பெறுவது வழக்கம். அவர் ஆளுங்கட்சியில் முதல்வராக இருந்தாலும் சரி, எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி அப்படித்தான் நடக்கும். ஆனால் இந்தமுறை தன் பிறந்த நாளுக்கு முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் சபாநாயகர் ஜெயக்குமார் என்று செய்திகள் வரவில்லை. போட்டோக்களும் பத்திரிக்கைகளில் வெளிவரவில்லை.2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago