A.P.Mathan / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்திற்கும் நேரடி மோதல் உருவாகியிருக்கிறது. முதலில் இரு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும், அடுத்த நாள் இன்னும் இரண்டு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்படி கோரிக்கை மனு கொடுத்தார்கள். முதலில் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் மதுரை சுந்தரராஜனும், திட்டக்குடி தமிழழகனும்தான். இவர்களில் மதுரை சுந்தரராஜன் விஜயகாந்தின் இளம் வயதிலிருந்தே நண்பர் என்பதும், பள்ளித் தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சந்தித்த இரு எம்.எல்.ஏ.க்கள் நெல்லை மைக்கேல் ராயப்பன். இன்னொருவர் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அருண் பாண்டியன். இவர் சினிமா நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த "நால்வர் அணி"யுடன் நிற்கவில்லை இந்த "கட்சி மாறும் பாசம்". இன்னும் பல தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை அடுத்தடுத்து சந்திக்கப் போகிறார்கள் என்ற தகவல் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருகிறது.5 hours ago
9 hours ago
abdulla Sunday, 04 November 2012 07:25 AM
குப்பை அரசியல்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago