A.P.Mathan / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இது கிறிஸ்மஸ் சீஸன். வழக்கமாக கிறிஸ்துவ மதத்தினர் இந்த விழாவினை சீரும் சிறப்புமாக கொண்டாடுவார்கள். தேவாலயங்கள் எல்லாம் களை கட்டி நிற்கும். ஆனால் அதில் அரசியல் கட்சிகள் எல்லாம் முந்தியடித்துக் கொண்டு "கிறிஸ்மஸ்" திருவிழாவை நடத்துவதுதான் - குறிப்பாக தேர்தல் சீஸனில் பிரதானமானது. அதுவும் ஏதாவது தேர்தல் வரப்போகின்றது என்றால், இந்த கொண்டாட்டங்களை அரசியல் கட்சிகள் ஆர்வமுடன் கையில் எடுத்துக் கொள்ளும். தமிழக முதல்வர் ஜெயலலிதா முதலில் சென்னை டிரேட் சென்டரில் நடத்திய பிரமாண்டமான "கிறிஸ்மஸ் விழா" மற்ற கட்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. சின்னஞ்சிறு கட்சிகள் அடுத்தடுத்து இதுபோன்ற கிறிஸ்மஸ் விழாக்களை நடத்தினாலும், இப்போது கலைஞர் கருணாநிதி தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்த் தலைமையில் உள்ள தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எல்லாம் அடுத்தடுத்து கிறிஸ்மஸ் விழாக்களை நடத்தியிருக்கிறார்கள். அதுவும் ஒரே நாளில் கருணாநிதியும், விஜயகாந்தும் வெவ்வேறு இடங்களில் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு சிறப்பம்சம் சிங்காரித்து நிற்கிறது.4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago