A.P.Mathan / 2013 மார்ச் 25 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தி.மு.க. செயற்குழு இன்று திங்கட்கிழமை நடந்து முடிந்திருக்கிறது. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் இலங்கை தமிழர் பிரச்சினையில் "பொதுவாக்கெடுப்பு", "போர்க்குற்ற விசாரணை" போன்றவற்றை முன்னிறுத்தி இந்தியாவே தக்கதொரு தீர்மானத்தை ஐ.நா. சபையில் கொண்டுவர வேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் அமைப்பு கூட்டத்தில் மற்ற சில நாடுகளே கலந்துகொள்ளாத நிலையில், இந்தியா அந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழுவில் "ஏன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட்டு விலகினோம்" என்பதை விளக்குவதே முக்கிய நோக்கமாக தி.மு.க. தலைவர்களுக்கு இருந்திருக்கிறது. வழக்கமாக செயற்குழுவில் பேசும் தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தமுறை சிறப்புறை ஆற்றவில்லை. அதற்கு பதில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் மட்டும் பேசியிருக்கின்றனர். 16 தீர்மானங்களையும் கட்சியின் தீர்மானக்குழு உறுப்பினர்கள் முன்மொழிய செயற்குழு வழிமொழிந்திருக்கிறது.4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago