2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

உற்சாக பானமே தேநீர்

R.Tharaniya   / 2025 மே 22 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலையில் ஒரு கப் டீ இல்லாமல் ஒரு சிலருக்கு நாளே ஓடாது. உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் தேநீர் பிரியர்களாக உள்ளனர்.

தேநீர் என்பது பல வீடுகளில் மாலையிலும், காலையில் ஒரு முறையும் கட்டாயம் குடிக்க வேண்டிய பானமாக மாறிவிட்டது. உள்ளத்தையும், உடலையும் உற்சாகமாக வைக்கின்ற உற்சாக பானம் தான் தேநீர்.

உள்ளூர் தொடங்கி உலக லெவலில் பிரசித்தி பெற்ற பானம் இது.  
ஐக்கிய நாடுகள் சபையின் படி, ஆண்டுதோறும் மே 21 அன்று சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது.

தேநீர் என்பது கேமிலியா சினேசிஸ் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் உட்கொள்ளும் பானம் தேநீர். தேநீர் நீண்ட காலமாக எங்களுடன் உள்ளது. 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தேநீர் அருந்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

“மன அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக தேநீர் போற்றப்படுகிறது. அதற்கு காரணம் அதில் உள்ள கலவைகள் என சொல்லப்படுகிறது. பதட்டம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஒரு கோப்பை தேநீரை பருகினால் பறந்து போகும் என சொல்லப்படுகிறது“

தேயிலை உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் வளரும் நாடுகளில் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது மற்றும் பல குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான ஏழைக் குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

தேயிலை தொழில் சில ஏழ்மையான நாடுகளுக்கு வருமானம் மற்றும் ஏற்றுமதி வருவாயின் முக்கிய ஆதாரமாக உள்ளது, மேலும் தொழிலாளர்-தீவிர துறையாக, குறிப்பாக தொலைதூர மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் வேலைகளை வழங்குகிறது.

வளரும் நாடுகளில் கிராமப்புற மேம்பாடு, வறுமைக் குறைப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் தேயிலை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது, இது மிக முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாகும்.

தேயிலை நுகர்வு பானத்தின் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் எடை
இழப்பு விளைவுகளால் ஆரோக்கிய நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. இது பல சமூகங்களில் கலாசார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

தனிநபர் நுகர்வு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில், தேவையை விரிவுபடுத்துவதற்கான அதிக முயற்சிகளை இயக்குவதற்கு, தேயிலை மீதான அரசாங்கங்களுக்கு இடையேயான குழுவின் அழைப்பை மீண்டும் வலியுறுத்துவது

மற்றும் பாரம்பரிய இறக்குமதி செய்யும் நாடுகளில் தனிநபர் நுகர்வு குறைந்து வருவதை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை ஆதரிப்பது, பொதுச் சபை மே 21ஐ சர்வதேச தேயிலை தினமாக அறிவிக்க முடிவு செய்தது.

சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் காலை, மாலை, பகல், இரவு என எந்நேரமும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் எனர்ஜி டானிக் தான் தேநீர். இப்படி உடல், பொருள், ஆவி, கலாசாரம் என நம்மோடு பின்னிப்பிணைந்துள்ளது.

தேநீர். வீடு, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு என எங்கு சென்றாலும் ‘சூடா ஒரு டீ சொல்லுப்பா...’ என ஒரு குரல் ஒலிக்கும். அந்த குரலை எல்லோரும் அன்றாடம் கடந்து கொண்டு தான் இருக்கிறோம். இப்படி ஸ்ட்ராங்கா, லைட்டா, மீடியமா, சர்க்கரை கம்மியா என தேநீர் குறித்த குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

தேநீரின் வரலாறு:

தென்கிழக்கு ஆசியாவில் தான் தேநீர் உதயமாகி உள்ளது. ஏனெனில், இங்கு தான் தேயிலைகள் விளைந்துள்ளன. சரியாக வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென்மேற்கு சீனா மற்றும் திபெத் ஆகிய பகுதிகளுக்கு இடையில் தான் தேயிலை முதன்முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஷாங் அரசாட்சி காலத்தில் தான் மருத்துவ ரீதியாக தேநீர் பருகும் வழக்கம் தொடங்கியுள்ளது. கால ஓட்டத்தில் அப்படியே படிப்படியாக உலகம் முழுவதும் தேயிலைகள் பயணித்துள்ளன. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கள் 

மூலமாக ஐரோப்பிய கண்டத்தில் நுழைந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நாட்டுக்குள் நுழைந்துள்ளது.தேநீரும் ஆரோக்கிய நன்மைகளும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தேநீரை நிச்சயம் தங்கள் டயட்டில் சேர்க்க வேண்டும் என சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

இதில் உள்ள ஃபிளாவனாய்டு (Catechin) கொழுப்பை குறைக்க பெரிதும் உதவும் என சொல்லப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கிரீன் டீ பருகலாம் என வல்லுநர்கள் சொல்கின்றனர்.

‘கிரீன்’ மற்றும் ‘பிளேக்’ டீயில் காணப்படும் நுண்ணூட்டச்சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக தேநீர் போற்றப்படுகிறது. அதற்கு காரணம் அதில் உள்ள கலவைகள் என சொல்லப்படுகிறது. பதட்டம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஒரு கோப்பை தேநீரை பருகினால் பறந்து போகும் என சொல்லப்படுகிறது.

தேநீரில் உள்ள Tannin-கள் வயிறு சார்ந்த பிரச்சனைகளை களைய அதிகம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tannin குடல் அழற்சியை குறைக்க உதவுவது தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தேநீர் பெருமளவு உதவுவதாக சொல்லப்படுகிறது. மாரடைப்பு உட்பட இருதய நோய் அபாயத்தை ஓரளவு குறைக்க இந்த பானம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .