2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பெண்களுடன் கொழுந்து பறித்த மோடி

S.Renuka   / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசு விழா மற்றும் தேர்தல் பிரசாரத்துக்காக அசாம் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள தேயிலை தோட்டத்துக்கு சென்ற மோடி, தேயிலை பறிக்கும் பெண்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன், சிறிது நேரம் தேயிலையும் பறித்து, இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில்  பெண்களுடன் அவர் கலந்துரையாடும் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “தேயிலை என்பது அசாம் மாநிலத்தின் ஆன்மா. இங்கு உற்பத்தியாகும் தேயிலை, உலகம் முழுவதும் பயணிக்கிறது. இன்று காலை திப்ருகர் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் பெண்களுடன் கலந்துரையாடினேன். அது ஒரு மறக்க முடியாத அனுபவம்” என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .