2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

2016இல் தேர்தல் இல்லை

Menaka Mookandi   / 2016 மார்ச் 02 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருடத்தில் எந்தவொரு தேர்தலும் நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடொன்று, கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர், 'எல்லை நிர்ணய சபையின் பணிகள் பூர்த்தியாகாமல் உள்ளமையினால், உள்ளூராட்சிமன்றம் தேர்தலை நடத்த முடியாதுள்ளது' என்றார்.

உள்ளூராட்சிமன்றங்கள் பலவற்றின் ஆயுட்காலம், இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு, கூட்டு எதிரணியினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .