2025 மே 20, செவ்வாய்க்கிழமை

போகொல்லாகமவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Gavitha   / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

2006ஆம் ஆண்டு கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், அரசாங்கத்துக்கு 2,077,718 ரூபாய் நட்டமேற்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் வெளிவகார அமைச்சர் ரோஹித  போகோல்லாகம வெளிநாடு செல்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, நேற்று (02) அனுமதியளித்தார். மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்காக, நான்கு மாதங்களுக்கு தனது கட்சிக்காரரின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு போகொல்லாகமவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க கோரியிருந்தார்.

தவிர, அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு காரணமாக, மீண்டும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தனது கட்சிக்காரர் ஆஜராகவுள்ளதால், வழக்கை இன்னுமொரு திகதியில் நடத்துமாறும் கோரியிருந்தார்.

இதையடுத்து போகால்லாகமவின் கடவுச்சீட்டை நான்கு மாதங்களுக்கு விடுவித்த நீதவான், வழக்குத் தொடர்பான நிலைப்பாட்டை அடுத்த திகதியில் அறிவிக்குமாறு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை அறிவுறுத்திய நீதவான், வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X