2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

2 மாதங்களுக்குள் மாறும் என்கிறார் மங்கள

Kanagaraj   / 2016 மார்ச் 08 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக இன்னும் இரண்டு மாதங்களுக்குள் புதியச் சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'புதியச் சட்டமூலத்துக்கான நகல் வரைவு பணிகள் சட்ட ஆணைக்குழுவினால் நிறைவுசெய்யப்பட்டு, நீதியமைச்சருக்கு வரைவொன்று அண்மையில் கையளிக்கப்பட்டது.

காணாமல் போனோர் தொடர்பில், காணாமல் போதல் சான்றிதழை வழங்குவதற்கான சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றுக்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை. அதனை விரைவில் கொண்டுவருவதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .