2025 ஜூன் 18, புதன்கிழமை

45 சடலங்கள் இதுவரை அடக்கம்

S. Shivany   / 2021 மார்ச் 14 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பல பிரதேசங்களில் கொவிட்19 தொற்றால் உயிரிழந்தோரில் 45 பேரின் சடலங்கள் இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை நிலவி வந்த   பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓரிரு சடலங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், அவற்றையும் உரிய முறையில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி பிரதேசத்திலேயே, கொவிட் சடலங்கள் தற்போது அடக்கம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .