2026 மே 06, புதன்கிழமை

48 மணித்தியாலங்களில் 30 பேர் மரணம்

J.A. George   / 2021 ஏப்ரல் 16 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டில் இடம்பெற்ற விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 150 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் அதிகளவானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் அதிகளவு விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

14ஆம் திகதி விபத்துக்களில் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15ஆம் திகதியான நேற்று 16 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .