2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது

Simrith   / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல, ஹொரகொல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சோதனையைத் தொடர்ந்து, வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் மற்றும் கணேமுல்லையைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஆகிய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

கணேமுல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X