2025 மே 01, வியாழக்கிழமை

’அதிக உப்பு தொற்று நோய்க்கு காரணம்’

Freelancer   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகளவான உப்பு உட்கொள்ளல் தொற்று நோய்கள் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் இலங்கையில் உள்ள மக்கள் அதிகளவு உப்பை உட்கொள்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளதாக  கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்றும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட நிபுணர் டொக்டர் ரேணுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அன்றாட வீட்டு உணவுகளில் உப்பை கலக்கும் போது  குறைவான உப்பைப் பயன்படுத்துவது  மிகவும் நல்ல ஆரோக்கியப் பழக்கம் என்று குறிப்பிட்டார்.

சோறு சமைக்கும்போது ஒரு சிட்டிகை உப்பைச் சேர்ப்பது தேவையற்றது என்றும், கருவாட்டிலுள்ள அதிகப்படியான உப்பை தேங்காய் நீரில் அரை மணி நேரம் ஊறவைப்பதன் மூலம் அகற்றலாம் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .