2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘அரசாங்கத்தை இலகுவில் கையளிக்கமாட்டோம்’

Editorial   / 2019 ஜூலை 08 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தை இலகுவில் கையளிக்கமாட்டோம்  எனத் தெரிவித்துள்ள, அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல இன்னும் 6 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியே வைத்துக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

இன்னும் 6 வருடங்களுக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னோக்கிக் கொண்டு செல்லப்படும் என்றும் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு, 6 ராஜபக்‌ஷக்கள் இணைந்திருப்பதாகத் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இவ்வாறானதொரு நடவடிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.

வெற்றிப்பெறும் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யவுள்ளதுடன், இதற்காக ஐ.தே.கட்சியின் வாக்குகள் மட்டுமல்ல வடக்கு, கிழக்கின் வாக்குகளையும் பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .