2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

‘ இணைந்து செயற்படுவதற்கான கூட்டமே நாளை’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், நாளை (27) காலை 10 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அலுவலகத்தில்  சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் ஜீ. எல் பீரிஸ், இக் கலந்துரையாடலானது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அல்லவென்றும் தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில், இன்று  (26)  இடம்பெற்ற, ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இச்சந்திப்பில் எமது கட்சி சார்பில் தானும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பஷில் ராஜபக்‌ஷ, டலஸ் ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .