2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு

Kanagaraj   / 2015 நவம்பர் 03 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம், பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாலபே தனியார் வைத்திய வித்தியாலயம் ஆகிய இரண்டுக்கும் எதிராகவே முன்னெடுக்கப்படவிருந்தது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கே, மிரிஹான பொலிஸார், கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X