2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இரசாயனம் கலந்த தேயிலைத்தூள் மீட்பு

Editorial   / 2019 ஜூன் 13 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,  மஹகம  பகுதியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றை நேற்று (12) சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்து இரசாயனம் கலந்ததாக தெரிவிக்கப்படும் ஒருதொகை தேயிலைத் தூளை மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 குறித்த தொழிற்சாலையிலிருந்து, 178 கிலோ 400 கிராம் தேயிலைத் தூள் மீட்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை மேற்கொள்வதற்காக அவற்றின் மாதிரி, தேயிலை சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .