2025 ஜூன் 30, திங்கட்கிழமை

உத்தியோகப்பூர்வ வீடுகளின்றி அமைச்சர்கள் சிலர்

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கான உத்தியோகப்பூர்வ வீடுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சராக பதவி  வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் குறித்த உத்தியோகப்பூர்வ வீடுகளை இதுவரை கையளிக்காமையே இதற்கான காரணமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அமைச்சர் பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பலருக்கே இன்னும் உத்தியோகப்பூ​ர்வ வீடுகள் கிடைக்கவில்லையென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த வீடுகளை ஒப்படைக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுக்கு பல தடவைகள் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X