2026 மே 11, திங்கட்கிழமை

‘எமது அரசாங்கமே அதிக சுதந்திரத்தை வழங்கியுள்ளது’

Editorial   / 2019 ஜூலை 07 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யார் எவ்வாறு விமர்சித்தாலும், கடந்த அரசாங்கத்தை விட தற்​போதைய அரசாங்கம் அதிக சுதந்திரத்தை வழங்கியுள்ளதென, பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (6) மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு, உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அழுத்தம், அச்சுறுத்தல் இன்றி வெகுசன ஊடகங்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செயற்பட்டு வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற கடத்தல், தாக்குதல், வௌ்ளை வான், ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் போன்ற எந்தவொரு சம்பவங்களும் கடந்த 4 வருடங்களில் இடம்பெறவில்லை என்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .