2025 ஜூன் 23, திங்கட்கிழமை

எரிபொருட்களின் விலை இன்று அதிகரிப்பு?

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய உள்நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்படவேண்டும்.
 
அதற்கமைய நிதியமைச்சு ஊடாக எரிபொருட்களின் புதிய விலைகள் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்க வேண்டும்.
 
கடந்த மாதத்துடன் ஓப்பிடுகையில் தற்போது உலக சந்தையில் பல்வேறு எரிபொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பெற்றோல் பீப்பாய் ஒன்றின் விலை 65.20 டொலரில் இருந்து 71.30 டொலராகவும் டீசல் பீப்பாய் ஒன்றின் விலை 71.23  டொலரில் இருந்து 75.32 டொலராகவும் மண்ணெண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.06 டொலரில் இருந்து 77.23 டொலராகவும் அதிகரித்துள்ளது.
 
அதற்கமைய இன்றைய தினம் எரிபொருட்களில் விலைகளில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .