Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2022 மார்ச் 11 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், விலைவாசிக்கு ஏற்றவாறு எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டும் என, அரசாங்கத்துக்கு முன்மொழிந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, நேற்று (10) தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
தற்போது, ஒரு லீற்றர் டீசலுக்கு 128 ரூபாய் மற்றும் ஒரு லீற்றர் பெற்றொலுக்கு 80 ரூபாய் நட்டமும் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலையை திருத்தும் அதிகாரம் பெற்றொலியக் கூட்டுத்தாபனத்துக்கு மட்டும் இருந்தால், அது தவிர்க்க முடியாமல் விலையை உயர்த்தும் என்று குறிப்பிட்டார்.
தற்போதைய விலையில் இந்த செலவை அரசாங்கம் ஏற்கும் என்று தாம் நினைக்கவில்லை என்றும், இந்த விலைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Apr 2025
30 Apr 2025