2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எரிவாயு தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

Freelancer   / 2022 ஜனவரி 12 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரவ பெற்றோலியம் எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பான நியமங்களை வகுத்து ஒழுங்குபடுத்துவதற்கு இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்துக்கு அங்கீகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, அனைத்து எரிவாயு இறக்குமதிகள், எரிவாயு சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள் மற்றும் வால்வுகளுக்கான இறக்குமதி மற்றும் விநியோகத் தரங்களை அமைக்கவும் ஒழுங்குபடுத்தவும் இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .