2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எஹலியகொட விபத்தில் இருவர் பலி

Kanagaraj   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் எஹலியகொட, உடுமன்ன பிரதேசத்தில் பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

நேற்றிரவு 9 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர் என்றும் அதிலிருவரே பலியாகியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஏனைய இருவரும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X