Editorial / 2025 மார்ச் 31 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் உட்கொண்ட வலஸ்முல்ல ஆதார மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டதாக மாத்தறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறை தீயகஹா பகுதியில் வைத்து குறித்த மருத்துவரிடமிருந்து 400 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளையும், அவரது நண்பரிடமிருந்து 2100 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளையும், 180 மில்லிகிராம் ஹெராயினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர் சம்பவ இடத்திற்கு வந்த சொகுசு கார் மற்றும் அவரது மருத்துவ உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
34 வயதான அவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் படித்ததாகவும், சந்தேகத்திற்குரிய மருத்துவர் 2016 இல் மருத்துவப் பட்டம் பெற்றதாகவும் பொலிஸ் தெரிவிக்கின்றனர்.
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026