2025 மே 19, திங்கட்கிழமை

கொண்டையா மீண்டும் விடுதலை

Gavitha   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்நடைகளை திருடினார் என்ற குற்றச்சாட்டில், அத்தன்கல நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட துனேஷ் பிரியஷாந்த என்று அழைக்கப்படும் கொண்டையா, மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்துக்குத் தகுந்த ஆதாரங்கள் நிரூபிக்கப்படாமையினாலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் கொண்டையா, நாளை கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் வேறொரு வழக்குக்காக ஆஜராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துனேஷ் பிரியஷாந்த என்றழைக்கப்படும் கொண்டையாவை மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X