2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் கொலை

George   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை திஹகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 12 வயது சிறுவனொருவன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 20 வயது இளைஞர், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 1.15 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை திஹகொடை கபுவத்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த கொலை இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X