2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கடந்த ஆறு நாட்களில் 509 கொரோனா மரணங்கள்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், ஓகஸ்ட் 1ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றுக்குள்ளாகி 509 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்தமாக 5,017 பேர் உயிரிழந்துள்ளனர். 

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிடும் அறிக்கையின் அடிப்படையில் 1ஆம் திகதி 63 மரணங்களும் 2ஆம் திகதி 74 மரணங்களும் 3ஆம் திகதி 82 மரணங்களும் 4ஆம் திகதி 94 மரணங்களும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் தலா 98 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 327,019 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X