2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கடமையில் இருந்த கான்ஸ்டபிள், வேன் மோதி பலி

Editorial   / 2025 ஏப்ரல் 09 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரவு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வேன் மோதி உயிரிழந்துள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், ரஸ்நாயக்கபுர, கடிகாவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளனர்.

உயிரிழந்தவர் நிக்கவெரட்டிய மொன்னகுளம கரிஹட்டிக்குளத்தை சேர்ந்த எச்.எம். உபுல் மதுஷங்கா (37) ரஸ்நாயக்கபுர பொலிஸ் நிலையத்தில் திருமணமாகாத ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

ரஸ்நாயக்கபுராவின் கடிகாவா பகுதியில் செவ்வாய்க்கிழமை (08) இரவு 8.00 மணியளவில்,   மற்றொரு கான்ஸ்டபிளுடன் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .