2025 மே 19, திங்கட்கிழமை

கராத்தே சாம்பியன் கொலை: மேலும் எண்மருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் காரத்தே சாம்பியனுமான வசந்த சொய்சாவின் படுகொலை, இன்னும் சிலருக்கு காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை விளைவித்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் எட்டுப்பேரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த எட்டுபேரும் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட எட்டுபேரில்  6 பேர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த எட்டுபேரும் சந்தேகத்தின் பேரில் 26ஆம் திகதி திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

ஏனைய இரண்டு சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X