2025 ஜூன் 30, திங்கட்கிழமை

‘கரும்புள்ளி ஏற்பட இடமளியோம்’

Editorial   / 2019 நவம்பர் 01 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு, தேசம், மதம் ஆகிய மூன்று முக்கிய விடயங்களுக்கும் கரும்புள்ளி ஏற்படும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் செயற்படாது என்று, சக்தி, எரிசக்தி மற்றும் வணிக மேம்பாடு அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, கொழும்பு தொட்டலங்கையில்,  நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், பிரதான மூன்று முக்கிய விடயங்களை, தான் இங்கு முன்வைக்க விரும்புவதாகவும் முதலாவதாக நாட்டின் பாதுகாப்பு, நாட்டு மக்களின் பாதுகாப்பு, இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்காலம் என்பவையே அந்த மூன்றும் என்றும் தெரிவித்தார்.

பிரதான இந்த மூன்று காரணிகளிலேயே,  நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளதாகத் தெரிவித்ததுடன், ஆனால் இன்று, நாட்டு மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததுடன், அந்தத் சதித்திட்டங்களைத் தகர்த்தெறியும் என்றும், நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதே, ஐ.தே.கவின் தேவை என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஐ.தே.க முன்னின்று செயற்படும் என்றும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X