2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணி தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையை நாடுமாறு, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

தென் மேற்கு பருவப்பெயர்ச்சி மழைக்கால நிலையையடுத்து, டெங்கு நுளம்பு அதிகரிக்கும் அனர்த்த மாவட்டங்களாக, ஏழு மாவட்டங்கள் உள்ளதாக, தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி ,மாத்தறை, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்கள் தற்பொழுது டெங்கு அனர்த்தம் அதிகம் உள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், காய்ச்சலாம் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அதற்கு பதிலாக, தேவையான அளவு நீர் அருந்துமாறும், குறித்த பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .