2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

‘காற்றின் வேகம் அதிகரிக்கும் ’

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதோடு, கடலலைகளும் இரண்டு, மூன்று மீற்றர் வரை உயர எழும்புமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதனால் மீன்பிடி நடவடிக்கைகள், ஏனைய கடற்றொழில்களில் ஈடுபடும் நபர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மி.மீ ஐ அண்மித்தளவில் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .