2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட் வீரர் தனுஷ்க கைது

Editorial   / 2022 நவம்பர் 06 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூகவலைத்தளம் ஊடாக தனக்கு அறிமுகமான 29 வயது பெண் ஒருவரையே, தனுஷ்க குணதிலக்க பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அனுமதியின்றி உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .