Editorial / 2025 நவம்பர் 03 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளையில் உள்ள பெல்வுட் அழகியல் கல்வி நிறுவனத்தின் மாணவியின் மரணம் தொடர்பாக கலஹா பொலிஸார் முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவரது உடல் சனிக்கிழமை மாலை (01) விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. .
இறந்த விதுஷன் நீதி, கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர். சக மாணவி ஒருவரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டனர்.
கொழும்பில் நடைபெற்ற ஒரு தேர்வுக்கு வந்த பிறகு, அவர் கிருஷ்ணபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று விடுதிக்குத் திரும்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர், ஆனால் சம்பவம் நடந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த சக மாணவி ஒருவருடன் அவர் அறையில் தங்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை பேராதனை போதனா மருத்துவமனையில் நடைபெற இருந்தது. கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025