2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘கைவிடாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 09 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகோதர, நட்பறவு நாடுகளின் கடமையானது, கடினமான சந்தர்ப்பங்களில் கைவிடாமல், ஒருவருக்கொருவர் உதவி செய்வதாகுமென, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்காக குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று காலை  இலங்கை வந்த பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  சந்தித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளுமாறு தனக்கு விடுத்த அழைப்பை, தான் சந்தோசமாக ஏற்றுக்கொண்ணடதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, வலய பாதுகாப்பு, சமாதானம் தொடர்பில் இச்சந்திப்பின் போது,  இரு நாட்டு தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .