2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

கொத்தணியில் 8070 பேர் குணமடைந்தனர்

J.A. George   / 2020 நவம்பர் 16 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3168 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து 91 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரில் இருந்து 12, இந்தோனேஷியாவில் இருந்து 78 பேர் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

பீ.சீ.ஆர்  பரிசோதனையின் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்டுபத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாகிஸ்தானில் இருந்து ஐந்து பேர் மற்றும் டுபாயில் இருந்து 22 பேர் இன்று (16) நண்பகல் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திவுலுபிட்டிய - பேலியகொடை கொரோனா கொத்தணியில் இருந்து இதுவரை  8070 பேர் குணமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X