2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா தொற்றுடைய இந்தியருக்கு இலங்கையில் சிகிச்சை

Editorial   / 2020 ஜூன் 19 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட இந்திய பிரஜை ஒருவர், கட்டாரிலிருந்து இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கடற்படையைச் சேர்ந்த மேற்படி நபரும் மேலும்  69 பேரும்; கடந்த 17 ஆம் திகதி, மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.

இவர்களில் 54 பேர் கொழும்பு தறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக இணைக்கப்பட்டதுடன், ஏனைய 15 பேர் கட்டாருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 

இவ்வாறு அனுப்பப்பட்வர்களில் மேற்படி நரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அங்கு வைத்து  அவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார். 

இந்நிலையில், அவர் மீண்டும் இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

சர்வதேச விமான பயணச் சட்டத்துக்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேற்படி நபரை இந்தியாவின் மும்பை நகருக்கு அனுப்பி வைக்க முடியாத நிலையில், அவருக்கு கொழும்பு ஐ.டீ.எச் இல் சிகிச்சை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X