Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 08 , பி.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
பிரதமர் தெரிவிப்பு: வரி அதிகரிப்பு, கடன்சுமை, எதிர்பார்ப்புக் குறித்தும் அறிவிப்பு
மக்களின் ஜாதகம் உச்சத்தில் இருந்தது என்கிறார்
வரிக்கு வரி, குட்டிபோட்டது
கடனுக்குக் கடன், கன்று ஈன்றது
விலைகளைக் குறைக்கத் தயார்: ஆனால், அபாயகரமானது
ராஜபக்ஷ ரெஜிமென்டின் இறுதிப் பயணம்
2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை (பாதீடு) தயாரிக்கும் போது, நாட்டின் கடன் தொடர்பிலான முழுமையான அறிக்கை கிடைத்திருக்கவில்லை என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது, இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற நிலைமைக்கு ஒப்பானதாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
'இறுதி யுத்ததில் பலர் காணாமல் போனார்கள். எனினும், அவர்கள் பலியாகிவிட்டதாகத் தகவல் கிடைத்தது. ஆனால், அவை உறுதிப்படுத்தப்படவில்லை. சடலங்களும் கிடைக்கவில்லை' என்று அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டு தேர்தலில், மக்கள் ஜாதகம் உச்சத்தில் இருந்தமையால், ராஜபக்ஷ ரெஜிமென்ட், இறுதிப் பயணம் செய்தது என்றும் பிரதமர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
'நாட்டைக் கட்டியெழுப்ப முடியாத நிலையொன்றே உருவாக்கப்பட்டிருந்தது. அதனை ஜனவரி 8ஆம் திகதியன்று மாற்றியமைத்தோம். பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் விழுந்திருக்கும் நாட்டை மீPட்டெடுப்பது என்பது மிகவும் கடினமானதாகும்.
நாடு, மலை போன்று கடனில் மூழ்கியிருக்கின்றது. நாட்டின் கடன் தொடர்பிலான அறிக்கையின்றியே, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னரே, கடன் தொடர்பில் இன்னுமின்னும் அறிக்கைகள் எமக்குக் கிடைத்தன.
பல்வேறு நிறுவனங்களின் ஊடாக பெற்ற கடனை கடந்த அரசாங்கம், அரசாங்கத்தின் வருமானமாக காண்பித்து, அதனால் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் பெற்ற கடன் தொடர்பிலான உண்மையான அறிக்கைகள் எமக்கு கிடைக்கவில்லை.
அரசாங்கம் பெற்ற கடன் தொடர்பிலான அறிக்கைகள், இன்னும் இன்னும் கிடைப்பதனால் கடன் பெற்றிருப்பது 10 சதவீதம் இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ராஜபக்ஷ ரெஜிமென்ட், அபிவிருத்தி என்று கூறிய போதிலும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எதனையும் செய்யவில்லை. விமான நிலையத்தை நிர்மாணித்தனர், விமானங்கள் இல்லைƒ துறைமுகத்தை நிறுவினர், கப்பல்கள் இல்லை. ஆகக் குறைந்தது விமான, துறைமுகம் ஆகியவற்றுக்கு அண்மையில் கைத்தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்குக் காணிகள் கூட ஒதுக்கப்படவில்லை.
கடன் பொறிக்குள் சிக்கவைத்து விடுவதையே ராஜபக்ஷ ரெஜிமென்ட் செய்தது. ஆகையால் நாடு 9.5 டிரில்லியன் ரூபாய் கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது.
அந்தப் பொறிக்குள் இருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்தச் சவாலை வெற்றிகொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும். உலக மக்களும் அதனையே விருப்புகின்றனர்.
மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆகையால், எரிபொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு கோருகின்றனர். ஆனால், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 365 மில்லியன் ரூபாய் கடனாகும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக மத்திய கிழக்கு வலய நாடுகள் அச்சுறுத்தல்களுக்கு முகங் கொடுத்துள்ளன. ஆகையால், எங்களுடைய தேயிலை ஏற்றுமதி கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது.
சீனாவின் பொருளாதார வீழ்ச்சி, எங்களுக்குத் தீமையாகவே இருக்கின்றது. ராஜபக்ஷ ரெஜிமென்ட் பெற்ற கடனை அடைப்பதற்குக் கடன் பெற்றது. கடனுக்கான கடன், கன்று ஈன்றது. வரிக்கு வரி, குட்டி போட்டது. இதனை இன்னும் இன்னும் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் தயாரில்லை.
கடனை அடைப்பதற்காக, கடந்த அரசாங்கம் பெற்றதை போல, நாமும் கடனைப் பெறுவதற்கு நாம் தயாரில்லை. வருமானங்களை அதிகரிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றறோம்.
புதிய வரி முறைகள் மற்றும் கூடுதலான வருமானத்தை ஈட்டுவதற்கான முறைகளை, 2017ஆம் ஆண்டிலாவது முன்னெடுக்க வேண்டும்
அதேபோல, அபிவிருத்தியை மேம்படுத்த வேண்டுமாயின், எங்களுடைய பொருளாதார வளர்ச்சியை 6 சதவீதமாக வைத்துக்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago