2024 மே 09, வியாழக்கிழமை

சடலம் சிக்கியதால் ரயில்கள் தாமதம்

Editorial   / 2024 பெப்ரவரி 13 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயிலில் மோதுண்ட நபரின் சடலம், இரண்டு தடங்களுக்கு இடையில் சிக்கியதால், கரையோர ரயில் சேவைகள் சில மணிநேரம் தாமதமடைந்தன என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

மகொன பிரதேசத்திலேயே ரயிலுடன் நபரொருவர் மோதியுள்ளார். அவருடைய சடலம் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை என கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

இதனால், ருகுணு குமார் மற்றும் காலி குமாரி விரைவு ரயில்கள் முறையே 35 மற்றும் 30 நிமிடங்கள் தாமதமாகின என களுத்துறை ரயில்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலியில் இருந்து கல்கிஸை வரைக்கும் பயணித்த 8319 என்ற இலக்கத்தைக் கொண்ட மெதுவாக பயணிக்கும் ரயிலிலேயே மோதுண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரமங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்ட சடலம், பயாகல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் ​மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X